மாங்காய் - பட்டாணி சுண்டல்

மாங்காய் - பட்டாணி சுண்டல்

 


இந்த நவராத்திரி திருநாளில் முக்கிய இடம்பிடிக்கும் சுண்டல் வகைகளில் முதலிடம் பிடிக்கும் இந்த மாங்காய் - பட்டாணி சுண்டல், அனைவரால் ருசிக்கப்படும் சுண்டலாகும்.

தேவையானவை:-

வேகவைத்த பட்டாணி - 3 கப்

மாங்காய்த் துருவல் - அரை கப்

தேங்காய்த் துருவல் - அரை கப்

வெங்காயம் - அரை கப்

சர்க்கரை - ஒரு சிட்டிகை

இஞ்சி - 1 துண்டு

பச்சை மிளகாய் - 4

கேரட் துருவல் - அரை கப்

சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

கடுகு, எண்ணெய் - தாளிக்க

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:-

இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கி அத்துடன் வேக வைத்த பட்டாணியை வடிகட்டி சேர்க்கவும். அடுப்பை நிறுத்தி தேங்காய், மாங்காய்த் துருவல்கள், சாட் மசாலாத் தூள் சேர்த்து பிரட்டவும். சுவையான சுண்டல் தயார்.

 


V.ஜான்சிராணி

பிகு

நவராத்திரியின் போது  பொதுவாக வெங்காயம் சேர்ப்பது இல்லை

இதனை வெங்காயம் இல்லாமலும் தயார் செய்து சாப்பிடலாம் 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,