இன்று குருநானக் ஜெயந்தி

 

இன்று குருநானக் ஜெயந்தி..!

8



சீக்கியர்களின் முக்கியப் பண்டிகையான குருநானக் ஜெயந்தி இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

·         


இந்தியாவின் முக்கிய மதங்களில் ஒன்றான சீக்கியத்தை தோற்றுவித்தவரான குருநானக்கின் பிறந்தநாள்குருநானக் குருபுரப்அல்லதுகுருநானக் ஜெயந்திஎன்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் பெளர்ணமி நாளன்று குருநானக் அவர்களின் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது.அதன்படி இந்த ஆண்டிற்கான குரு நானக் ஜெயந்தி இன்று 30.11.2020 கடைபிடிக்கப்படுகிறது.




சீக்கிய மதத்தை தோற்றுவித்ததாக கருதப்படும் சீக்கியர்களின் முதல் குருவான குருநானக்,தற்போதைய பாகிஸ்தானில் உள்ள ஷேக்புரா மாவட்டத்தில் 1469-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் நாள் பிறந்தார்.ஏப்ரல் மாதத்தில் பிறந்திருந்தாலும்,ஒவ்வொரு ஆண்டின் கார்த்திகை மாத பெளர்ணமி தினம் குருநானக் ஜெயந்தியாக கடைபிடிக்கப்படுகிறது.

குருநானக் ஜெயந்திக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப் தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு ஒவ்வொரு சீக்கிய குருத்வாராக்களிலும் வாசிக்கப்படும்.சிலர் வீட்டிலும் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள்.அதன் பின்னர் குருநானக் ஜெயந்தியன்று,அதிகாலை 4 மணியளவில் சீக்கிய பக்திப் பாடல்கள்,குரு கிரந்த சாகிப்பில் உள்ள அறிவுரைகள் ஆகியவற்றுடன் குருநானக் ஜெயந்தி கொண்டாடங்கள் துவங்கும்.அதனை தொடர்ந்து லங்கர் எனப்படும் சமையலறை மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவசமாக உணவு பரிமாறப்படும்.

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,