கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
இறைவன் அன்பு நிறைத்தவன் என்பதை விளக்கும் பாடல்
பாடியவர் திரு டேப் ராதாமாணிக்கம்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் – இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் – இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் – இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
பெத்தலகேம் நகரில் மாட்டுத் தொழுவமதில் பிறந்தார் பரமபிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா
ஆறுவயதினில் ஆரம்பப் பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பத்தாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்
இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே
எல்லா உயிர்களும் தன்னுயிரெனவே பேசி மகிழ்ந்தாரே
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் – இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
ஜெருசலம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே
பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசுவின் கேள்வியில் ஆலயகுருக்கள் ஆனந்தமானாரே
இளமையில் செய்த திறமையில் பாஸ்கா பெருமையை வளர்த்தாரே
இளமை பருவத்தில் எளிய வாழ்க்கையின் இருப்பிடமானாரே
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே
தந்தையார் செய்த தச்சுத் தொழிலையே தனையனும் செய்தாரே
தங்க உழவர்கள் உழுதிடக் கலப்பைகள் செய்து கொடுத்தாரே
தங்க உழவர்கள் உழுதிடக் கலப்பைகள் செய்து கொடுத்தாரே
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் – இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உழுங்கள் என்று
உலகப் பிதா சொன்னபோது
உழவர்கள், தொழிலாளர், ஊராரின் எண்ணமதில்
இயேசு ஒன்றாகப் பதிந்து விட்டார்
இயேசு ஒன்றாகப் பதிந்து விட்டார்
அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே
ஆண்டவர் தொண்டு என்றார் இயேசு
ஆண்டவர் தொண்டு என்றார்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் – இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகளேற்றாரே
ஞானஸ்நானமும் பெற்றாரே
துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே இயேசு
நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து
காட்டி கொடுத்தானே முப்பது காசுக்காகவே
காட்டி கொடுத்தானே
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் – இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே
தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே
சிகப்பு அங்கியால் ஏசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை
சிலுவையில் அறைந்தாரே
மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே
பனிரென்டு சீடர்கள் நடுவினில் தோன்றி ஆசிகள் அளித்தாரே
உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி நம்மையும் காப்பாரே
உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி நம்மையும் காப்பாரே
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் – இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் – இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
Comments