கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் முன்னெச்சரிக்கையுடன்செயல்படுமா
.பானகம்
வெல்லம், பனை வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றிக் கரைத்துக்கொள்ளுங்கள். 2 அல்லது 3 வெற்றிலை (காம்பை நீக்கிவிடுங்கள்), ஒரு கைப்பிடி துளசி இரண்டையும் நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் சுக்கு அல்லது இஞ்சியைத் துருவிக்கொள்ளுங்கள். வெற்றிலை விழுதையும் இஞ்சித் துருவலையும் வெல்லத் தண்ணீரில் கரைத்து, ஒரு சிட்டிகை ஏலப்பொடி சேர்த்துக் கலந்து வடிகட்டிப் பரிமாறலாம்.
Comments