சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்

 பொங்கல் முடிந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்... சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்



பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருவதால், சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


சென்னையில் இருந்து 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். 


பண்டிகைக் கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சென்னைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.


இதனால், சென்னை- மதுரை நெடுஞ்சாலையில் நேற்று பகல் முழுவதும் போக்குவரத்து நெரிசலாக இருந்தது. 


இரவிலும் ஏராளமான வாகனங்கள் வந்து கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். 


நீண்ட நேரத்திற்குப் பின்னரே கொடைரோடு, விக்கிரவாண்டி சுங்கச் சாவடிகளைக் கடக்க முடிந்தது.


ஆத்தூர், பரனூர் சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 


ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்ததால் பெருங்களத்தூரைக் கடக்க நீண்ட நேரம் ஆனது. 


திருப்பத்தூர் வழியாக வாகனங்கள் ஏராளமாக வந்ததால் வாணியம்பாடி சுங்கச்சாவடியிலும் அணிவகுத்து நின்றன.


தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. 


ரெயில்கள் அனைத்திலும் அனைத்து வகுப்புகளிலும் காத்திருப்போர் பட்டியலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். 


இதனால், சமூக இடைவெளியை பின்பற்ற முடியாமல் ரெயில் பெட்டிகள் பயணிகளால் நிரம்பி வழிந்தன.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,