கரூர் மாவட்டம் குளித்தலை நகர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ செட்டு மருந்து வழங்கும் முகாம்

    




               




 கரூர் மாவட்டம் குளித்தலை நகர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ செட்டு மருந்து வழங்கும் முகாம் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் 12 முகாம்களின் மூலம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும்  முகாம்கள் மிக  சிறப்பாக நடைபெற்றது.குளித்தலை பெரியபாலம் அரசின் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி கலந்து கொண்டு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியதோடு நகரத்தில் அமைக்கப்படிருந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் 12 முகாம்களில்  பணிபுரியும் பணியாளர்களுக்கு  சங்கத்தின் சார்பாக மதிய உணவினை வழங்கி மருத்துவர் மற்றும்  பணியாளர்களிடம் தங்களின் பணி மிக சிறந்த பணி நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக பணியாற்றிடுமாறு அன்புடன் வணங்கி கேட்டு கொண்டார். இந்த நிகழ்வில் அரசு மருத்துவர் அமீர்தீன் , நகராட்சி சுகாதார ஆய்வாளர்  இஸ்மாயில் ,மற்றும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கல்யாண வெங்கட் ராமன் , தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,