தொல்லைபேசி

 தொல்லைபேசி




கஸ்டமர் கேர் கொடுமைகளை தமக்கே உரிய பாணியில்..
ஒரு முறை உன் சொத்தையே எழுதி வை என்று பில் வந்தபோது தான் கஸ்டமர் கேரை தொடர்புகொண்டேன். 180 டயல் செய்தவுடன் முதலில் வாஞ்சையுடன் வரவேற்றது. மொழியை தேர்ந்தெடுத்து அமுக்கி முடிந்ததும் அர்ஜென்ட்டா, ஆர்டினரியா என கேட்கிறது. ஹோட்டல்களில் சாதாவா, நெஸ் ரோஸ்டா என்பதுபோல் உடனே எண்ணை அழுத்துவது தப்பு. தாமதமானால் மீண்டும் முதலிலிருந்து.. அதான் முன்னாடியே சொல்லியாச்சே சனியனேனு திட்டமுடியாது. கேள்வி காலாவதியாகியிருக்கும். மீண்டும் ஆம் என்றால் 1, இல்லையெனில் 2, தலைமுடியை பிய்த்துக்கொள்ள 3, போனை உடைக்க 4 என இருந்தால் பரவாயில்ல என சொல்லியிருப்பார். இது இன்றுவரை தொடர்கிறது. இன்னும் அந்த அதிகாரிகள் ஏழு மலை, ஏழு கடல் தாண்டி கிளியிடம் பேசுவதுபோலத்தான் சேவைமைய அதிகாரிகளிடமும் பேச முடிகிறது.
ஒரு டெலிபோன் உரையாடல்
நண்பர்: ஹலோ
மகள்: நான் சந்தியா பேசறேன். இரண்டாம் வகுப்பு
நண்பர்: அப்பா இல்லையா
மகள்: ம்..ம்.. இல்லை
நண்பர்: வீட்டில வேற யாரு இருக்காங்க
மகள்: சேகர் இருக்கான். இருங்க போனை கொடுக்கிறேன்
நண்பர்: ஹலோ சேகர்..
சேகர்: ம்ம ல லா
(சேகர் இரண்டு வயது குழந்தை)
இதை நினைத்து நினைத்து சிரித்துள்ளேன். இறுதியில் ஒரு ருசிகர நகைச்சுவை.
நிரந்தர ஆச்சர்யக்குறி
நல்ல வரிகளைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு மோப்பசக்தி அதிகம் உள்ளதாக மனுஷ்யபுத்திரன் தெரிவித்திருப்பார். விரும்பிய பாடலில் நமக்குப் பிடித்தமான சுதியோ, இசையோ வருவது போலத்தான் சுஜாதாவின் எழுத்தின் இடையே.. எப்போது நகைச்சுவை வருமென எதிர்பார்ப்பதும், காத்திருப்பதும் சுவாரஸ்யம். காரின் கியர் போடுவதுபோல சங்கத்தமிழ், மேலைநாட்டு இலக்கியம், சமகால பார்வை, எதிர்கால டிஜிட்டல் யுகமென எல்லா இடத்திலும் சிக்சர் அடித்தவர் சுஜாதா மட்டும்தான். இந்த வல்லவனுக்கு வல்லவன் இன்னும் பிறக்கவில்லை என்பதே நிதர்சனம். ஒவ்வொரு வருடமும் சொல்வதுதான் அதையே மீண்டும் மீண்டும் புதுப்பிப்போம்.
``ஒரு பெயர் அதன் பின்னே நிரந்தரமான ஆச்சர்யக்குறி ``சுஜாதா..!"
-மணிகண்ட பிரபு
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,