சிற்றன்னையும் உதிரிப்பூக்களும்

 எங்கிருந்தோ கதையை சுட்டு மூச்சு விடாமல் படம் எடுத்து பெயர் வாங்குபவர்களுக்கு மத்தியில் மகேந்திரன் வித்தியாசமானவரே. இதோ அவரது எழுத்தின் வழியே அவரே உங்களிடம் பேசுகிறார்...


















"மற்றவர்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்கு முன்னாடி முதலில் சிற்றன்னை எழுதிய புதுமைபித்தன் அவர்களின் குடும்பத்திற்கு மூலக்கதைக்கான ஒரு தொகையை கொடுங்கள்" என்றேன். அவரோ ஒரு மாதிரி தயங்கினார்.
"என்ன தயங்குறீங்க?"
"அது ஒண்ணும் இல்லே... நீங்க தந்த சிற்றன்னை புத்தகத்தை வாசிச்சேன்... ஆனா இப்ப நீங்க எழுதியிருக்கிற 'உதிரிப்பூக்கள்' கதைக்கும் சிற்றன்னைக்கும் எந்த சம்பந்தமில்லையே. அப்புறம் எதுக்கு அவுங்களுக்கு பணம் கொடுக்கனும்?"
பார்த்தீர்களா... ஒரு நாவல் சினிமாவுக்கான திரைக்கதையாக உருமாறும்போது, பாலகிருஷ்ணன் போன்ற தயாரிப்பாளர் மட்டும் அல்ல, சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் கூட அடிப்படை உண்மை அறியாது எப்படித் தடுமாறுகிறார்கள்?
நான் சொன்னேன், "சிற்றன்னை கதையை நான் படிக்காமல் விட்டிருந்தால் இன்று இந்த 'உதிரிப்பூக்கள்' கதை உருவாகியிருக்காது. நானும் வருகிறேன், முதலில் அவர்களின் குடும்பத்திற்கு உரிய மரியாதையை முறைப்படி செய்து விட்டு வரலாம்.
அதன்படியே நடந்தது. என் மனம் நிறைந்தது
ஆனால் "உதிரிப்பூக்கள் வெற்றி கண்டதும் ஒரு இலக்கிய வட்டம் என்னைப் பழித்துக் கடிதம் எழுதியது எப்படி? இப்படி:
படத்தின் தொடக்கத்தில் டைட்டிலில் மூலக்கதை அமரர் புதுமைப்பித்தன் எழுதிய 'சிற்றன்னை' என்று போட்டிருக்கிறாய். அவர் பெயரை வைத்து வியாபாரம் நடத்தி விட்டாய்..."
நான் எவ்வளவு வேதனை பட்டிருப்பேன் (மனத்திற்குள் சிரித்திருப்பேன்) என்பதை இப்போது உங்களால் உணர முடியும்.
ஒரு நாவலை திரைக்கதையாக்கி படம் எடுப்பதில்,வெற்றி காண்பதில்,வாழ்த்தும் வசவும் சேர்ந்து தான் வரும். நான் இரண்டையும் ஒன்றாக ஏற்கிறேன்......"
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,