தினமும் சாப்பிட வேண்டிய சாப்பிடக்கூடாத உணவு எது?

 பிரானிக் உணவுகள்: தினமும் சாப்பிட வேண்டிய உணவு எது?... தினமும் சாப்பிடக்கூடாத  உணவு எது?



தற்போது பலரும் உணவு குறித்த அறிவை பெற துவங்கிவிட்டனர். அதிமான மக்கள் ஆயுர்வேத வாழ்க்கை முறைக்கு மாறி வருகின்றனர். ஆயுர்வேதம் ஒரு பழங்கால மருத்துவ முறையாகும். இந்தியாவில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு மருத்துவ முறையாக இது பார்க்கப்படுகிறது. ஆயுர்வேத உணவானது ஆரோக்கியமான உணவுகளை உண்பதற்கு நம்மை ஊக்குவிக்கிறது. மேலும் மனதை தெளிவாகவும், உடலை நச்சுத்தன்மையற்றதாகவும் மேலும் நல்ல ஊட்டச்சத்தை பெறவும் உதவும் உணவுகளை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.


ஆயுர்வேத சிகிச்சை முறையானது பிரானா என்ற கருத்தை நம்புகிறது. இது நமது உடலில் மாற்றங்களை செய்யக்கூடிய ஆற்றலை குறிக்கிறது. பிரானா அல்லது பிரானிக் உணவுகளை பொறுத்தவரை இரு வகையான உணவுகள் உள்ளன. நேர்மறை மற்றும் எதிர்மறை உணவுகள். நேர்மறை உணவுகள் உடலுக்கு நன்மை பயப்பதாகவும் எதிர்மறை உணவுகள் உடலுக்கு கேடு விளைவிப்பதாகவும் உள்ளது.


​பிரானிக் உணவுகள்


ஆயுர்வேத கோட்பாடுகளின்படி நாம் எப்போதும் உடலுக்கு நன்மை பயக்க கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். அவை உங்கள் உணவு ஆசையை நிறைவேற்றுவதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை அதிகமாக உண்பதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தீங்கு விளைவிக்கும் உணவுகள் நமது உடலில் ஏற்படும் பல்வேறு உபாதைகளுக்கு காரணமாகின்றன.


​ஆயுர்வேதம்


இயற்கையில் உள்ள எதிர்மறையான உணவுகள் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் பங்களிப்பதில்லை. மாறாக அவை உடல் மற்றும் மன ரீதியாக எதிர்மறையாக செயலாற்றுகிறது. இவை பிரானா என்னும் செயல்முறையை உயிரற்றதாகவும் பயனற்றதாகவும் ஆக்குகிறது. பிரானா என்பது என்பது உடலுக்கு ஆற்றலை அளிக்கும் முறை என ஆயுர்வேதம் நம்புகிறது. ஆனால் பிரானாவில் எதிர்மறையான செயலாற்றும் தாவரங்களும் உள்ளன.


ஆயுர்வேத கொள்கைகளின்படி பூண்டு, வெங்காயம் இரண்டும் முக்கியமாக தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகும். இவை இரண்டும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், ஆயுர்வேதத்தில் இவற்றை தவிர்க்க சொல்கிறது.


​வெங்காயம்


உண்மையில் நமது உணவில் வெங்காயத்தை நீக்குவது என்பது சாத்தியமில்லாத விஷயமாகும். ஆனால் ஆயுர்வேத கொள்கைகளின்படி உடலுக்கு ஆற்றல் அளிக்கும் பிரானா என்னும் உணவு முறைக்கு எதிரானது வெங்காயம். அதாவது ஆயுர்வேத கூற்றுப்படி அவை உடலுக்கு பயனுள்ள ஆற்றலை வழங்காது. மேலும் அவை குறைவான அளவில் ஊட்டச்சத்தை கொண்டுள்ளன. ஆனால் இவை உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகின்றன.


வெங்காயத்தில் சில என்சைம்கள் உள்ளன. அவை கவனம் செலுத்தக்கூடிய நமது திறனை பாதிக்கின்றன. அவை வாசனை திறனை பாதிக்கும். மேலும் கடுமையான துர்நாற்றத்தை நம்மில் இருந்து வெளியிடும். மேலும் இது தலைவலியையும் ஏற்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் வெங்காயம் இன்றியமையாத உணவு என்பதால் அதன் பயன்பாட்டை குறைக்க முயற்சிக்கலாம்.


​பூண்டு


வெங்காயத்தை போலவே பூண்டும் எதிர்மறையான பிரானிக் மதிப்பை கொண்ட தாவரமாகும். அன்றாடம் பூண்டை எடுத்துக்கொள்வது நல்ல பழக்கம் அல்ல. இது மிகவும் கடுமையான உணவாகும். இது உடலில் வெப்பம் மற்றும் பித்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கிறது. குடலில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. மேலும் மூளையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதிகப்படியாக பூண்டு உட்கொள்வது நம் உடலில் எதிர்மறை உணர்ச்சிகளை தூண்டும்.


​நேர்மறையான பிரானிக் உணவுகள்


ஆயுர்வேத கூற்றுப்படி நேரமறையான பிரானிக் உணவுகள் உங்கள் ஆற்றல் மட்டத்தை மேம்படுத்துகின்றன. இவை உங்கள் உடல் நல தேவைகளை பூர்த்தி செய்கின்றன. மேலும் இவை நமது உடலில் நேர்மறை ஆற்றலை தக்க வைத்து கொள்ள உதவுகின்றன. உடலில் உள்ள பல சிக்கல்களையும் குணப்படுத்த இவை உதவுகின்றன. மேலும் அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் நோய்களை குணப்படுத்தவும் இவை உதவுகின்றன. எனவே உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய மூன்று நேர்மறையான உணவுகளை இப்போது பார்ப்போம்.


​சாம்பல் பூசணிக்காய்


சாம்பல் பூசணிக்காய் ஒரு சுவையான உணவாகும். நல்ல சுவையை தருவதோடு இது பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. ஆயுர்வேத முறைப்படி அனைத்து பிரானிக் உணவுகளை விடவும் சாம்பல் பூசணிக்காய் அல்லது வெள்ளை பூசணிக்காயில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. காலையில் இதை சாறு செய்து குடிக்கலாம். அப்படி செய்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இது உதவுகிறது. மேலும் உங்கள் அறிவு திறனை மேம்படுத்தவும் மோசமான குளிரை எதிர்த்து போராடவும் இது உடலை ஊக்குவிக்கிறது.


மிளகு மற்றும் தேனை சாம்பல் பூசணியுடன் கலந்து உண்ணும்போது அது உடலில் உள்ள சளியை நீக்குகிறது.


​தேன்


மேற்கத்திய நாடுகளில் தேன் நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது என நம்பப்படுகிறது. ஆயுர்வேத கூற்றுப்படி தேனில் உள்ள மூலக்கூறு கலவையானது இரத்தத்தை போலவே தூய்மையானது. இது இரத்த சோகை பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் காலையில் தேனை தண்ணீரில் கலந்து உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும்.


​மசாலா


சுவைக்காக நாம் உணவில் அதிகமான மசாலா பொருட்களை சேர்ப்பதுண்டு. மசாலா பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியவை என்கிற கருத்து பரவலாக இருந்து வருகிறது. ஆனால் அவற்றை சரியாக பயன்படுத்தினால் அவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உடலை சீரமைப்பதற்கும் உதவலாம்.


மிளகு, பெருங்காய தூள், மிளகாய் மற்றும் மஞ்சள் இவையெல்லாம் பிரானிக் ஆற்றல் அதிகம் கொண்ட மசாலா பொருட்களாக உள்ளன. ஆனால் இவற்றை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். அதிகப்படியாக இவற்றை எடுத்துக்கொள்வது செரிமான அமைப்பில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,