சாரு நிவேதிதா பயணம்


 ஒரு பிரபல நடிகர் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் 100 கோடி. ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் தன் அறுபது வயதில் ஒரு நாவலுக்குப் பெறும் ராயல்டி வருடம் சுமார் 50,000 /- வரலாம். அதுவும் அடுத்த வருடம் 20,000 க்குக் கீழே இறங்கி விடும். இப்படி இருக்கும் தமிழ்ச்சூழலில் இதுவரை சாரு நிவேதிதா அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருக்கமான வாசகர்களின் ஆதரவில் மட்டுமே இயங்கி வருகிறார். சமீபத்தில் அவர் மேற்கொண்ட சீலே பயணம் முழுவதுமே இதைப்போன்ற நெருக்கமான வாசகர்களால் மட்டுமே சாத்தியமானது. சீலேவுக்குச் சென்ற முதல் தமிழ் எழுத்தாளர் சாரு நிவேதிதாவாகத்தான் இருப்பார்.

சாரு நிவேதிதா பயணம் செல்வதே எழுதுவதற்காகத்தான். அந்தப் பயண அனுபவத்தில் தான் பெற்றதை இந்தத் தமிழ் சமூகத்துக்கு கொடுக்கத்தான். துருக்கி , லெபனான் என சமீபத்தில் சென்று வந்த பயணங்கள் எல்லாம் நூல்களாக வெளிவந்துள்ளன. அவை பெரும் வாசகப் பரப்பை அடைந்து புதிய திறப்புக்களை உண்டாக்கியுள்ளன.
68 வயதாகும் சாரு நிவேதிதா 25 வயதில் எழுத ஆரம்பித்தவர். இதுவரை 100க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. பல கட்டுரைகள் வலைத்தளத்தில் இருந்து இன்னும் நூல்களாகத் தொகுக்கப்படாமல் உள்ளன. தற்போது அவர் பிஞ்ச் ஆப்பில் எழுதி வெளிவந்துகொண்டிருக்கும் “நான்தான் ஔரங்கசீப்…“ ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். இதற்கு அவர் வாங்கிய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் புத்தகங்களின் விலை மட்டுமே சில லட்சங்களைத் தாண்டும். இதற்காக அவர் படித்த பக்கங்கள் அந்த விலையையும் தாண்டும்.
இந்த வயதிலும் ஒரு இளைஞனைப் போல இன்னும் பல புதிய படைப்புகளைத் திட்டமிட்டு வருகிறார். அவையெல்லாம் பெரும் உழைப்பையும், அதிக நிதியையும் கோருபவை. பெரும்பாலான பணம் புத்தகங்கள் வாங்கவும், பயணம் செய்யவுமே தேவைப்படுகிறது.
தமிழ் இலக்கிய உலகில் ரகசியமாக நிறுவனங்களையோ, பெருந்தனக்காரர்களையோ நாடாமல், வெளிப்படையாக, நேரடியாக வாசகர்களிடம் கோரிக்கை வைத்தவர் சாரு நிவேதிதா. இதற்காக சக எழுத்தாளர்களிடம் இருந்தே அதிக பட்ச ஏளனங்களையும் அவமதிப்பையும் எதிர்கொண்டவர். சாருவின் வாழ்வில் எல்லாமே வெளிப்படைதான். பூனை உணவுக்குப் பணம் வேண்டும் என்றால், பூனை உணவுக்குப் பணம் கொடுங்கள் என்பார். ரெமி மார்ட்டினுக்குப் பணம் வேண்டும் என்றால் ரெமி மார்ட்டினுக்குப் பணம் கொடுங்கள் என்பார்.
இப்போது இந்தத் தளத்தை மேம்படுத்தவும், உலக அளவில் பயணம் மேற்கொண்டு எழுதவும், பல புத்தகங்கள் வாங்கவும் நிதி தேவைப்படுகிறது. பூனை உணவு போன்ற பூனை உலக லௌகீக விஷயங்களை எல்லாம் நண்பர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். இந்தத் தளம் மீண்டும் சுறுசுறுப்பாக செயல்பட உள்ளது. இந்தத் தளத்தில் உலக சினிமா, உலக இலக்கியம் என பல்வேறு விஷயங்களை எழுத இருக்கிறார். இனி வரும் காலத்தில் விடியோவிலும் தொடர் செயல்பாடுகளை வடிவமைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார். வாசகர்களாகிய உங்கள் ஒத்துழைப்பின் மூலமே இவை அனைத்தும் நடந்தேறும். இதுவரை அப்படித்தான் நடந்து வந்தது, இனியும் அப்படியே…
சாருவின் இணையதளத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,