ஈரோட்டில் உதித்த இன்னொரு சூரியன்/ பிருந்தா சாரதி

 ஈரோட்டில் உதித்த இன்னொரு சூரியன்






--------------------------------------

சிலையாய் நின்ற எம்மை

இயங்க வைத்தவன்


சிலையாய் ஆன பின்பும்

இயங்கி வருபன்.

*

பூதக் கண்ணாடி கொண்டு

செய்திகள் படித்தவன்


பூதங்கள் எங்கெனச் 

சொடக்குப் போட்டவன்.

*

துல்லியமாக உண்மையை    அறிந்தவன்


துடிப்புடன் பொய்களைச்

சாடி அழித்தவன்.

*

நாளைகள் நமக்கு 

வெளிச்சமாகிட


இருட்டை மேனியில்

தூக்கிச் சுமந்தவன்.

*

இருண்ட பாதையில்

ஒளிக்கதிர்  பாய்ச்ச


இன்னுயிர் வாழ்வை

இசைவுடன் கொடுத்தவன்.

*

கைத்தடி ஊன்றி 

நடந்த காலையும்


முடங்கிய இனமது

நிமிர்ந்திட உழைத்தவன்.

*

தந்தையைப் போலக் கண்டிப்பானவன்


தாயினும் மேலாய்க் கரிசனம் கொண்டவன்.

*

அழுகிய சிந்தனை

அறுத்த மருத்துவன்


அழியாப் புகழுடன்

நிலைத்த பெருமகன்.

*

ஈராயிரம் ஆண்டு

இருட்டை வெளுத்தவன்


ஈரோட்டில் உதித்த

இன்னொரு சூரியன் .

*

_ பிருந்தா சாரதி




*

#பெரியார் #ஈவெரா #அய்யா #நினைவு நாள்

*

நன்றி 

ஓவியம்: Trotsky Marudu Maruthappan

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,