தக்காளி குழம்பு

 தக்காளி, வெங்காயத்தை மட்டுமே வைத்து செய்யும் இந்த குழம்பை தட்டு நிறைய சாதத்துடன் சேர்த்து சாப்பிட கொடுத்து பாருங்கள்



சாம்பார், காரக்குழம்பு, குருமா இவை அனைத்திலுமே ஏதாவது காய்கறிகளை சேர்த்து செய்யும் பொழுது தான் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் என்றாவது ஒருநாள் இவ்வாறு குழம்பு வைப்பதற்கு வீட்டில் காய்கறிகள் இல்லை என்றால், சற்றும் யோசிக்காமல் இந்த தக்காளி குழம்பை வைத்து விடுங்கள். இதனை செய்வதற்கு நேரமும் குறைவாக தான் செலவாகும். புளி கரைத்து சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது. வீட்டில் இருக்கும் இந்த எளிமையான பொருட்களை வைத்தே சட்டென, மிகவும் ருசியான தக்காளி குழம்பை செய்து விட முடியும். இதனை சுட சுட சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடும் பொழுது நாவில் எச்சில் ஊறும் சுவையில் அவ்வளவு அற்புதமாக இருக்கும்

தேவையான பொருட்கள்:

 வெங்காயம் – 4, தக்காளி – 6, சோம்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, பூண்டு – ஐந்து பல், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 7 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

பிறகு மீதமிருக்கும் தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக காய்ந்ததும் அதில் 7 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடு ஏறியதும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளியையும் சேர்த்து குழைந்து வேகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். 

பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இவற்றுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பின்னர் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, ஒரு தட்டு போட்டு மூடி, 5 நிமிடத்திற்கு கொதிக்க விடவேண்டும். பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி, கலந்து விட்டு, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,