தீபாவளி திருநாளில் ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்; அதன் சிறப்புக்கள் என்ன?*

 தீபாவளி திருநாளில் ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்; அதன் சிறப்புக்கள் என்ன?*




தீபாவளித் திருநாளில் ஏன் விளக்கு ஏற்ற வேண்டும் ?எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? இதனால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். 



பொதுவாக தீபாவளி ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான 22ஆம் தேதி, தன திரயோதசி என அழைக்கப்படுகிறது. அன்று குபேரனுக்கும், லட்சுமிக்கும் சிறப்பு பூஜை செய்ய வேண்டும். (சில பஞ்சாங்கங்களில் 23ஆம் தேதி தன திரயோதசி என்றும் குறிப்பிடப்படுள்ளது) இரண்டாம் நாளான 23ஆம் தேதி சிறிய தீபாவளி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில்தான் நரகாசுரனை கிருஷண பகவான் கொன்றதாக புராணங்கள் கூறுகின்றன. 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் லட்சுமி பூஜை செய்வது வழக்கம். ராவணனை கொன்ற பின்னர் இந்த நாளில்தான் அயோத்திக்கு ராமர் வந்ததாக கூறப்படுகிறது. 25ஆம் தேதி கோவர்த்தன பூஜை செய்யப்படுகிறது. 26ஆம் தேதி, இந்த நாளில் சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான உறவை கொண்டாடும் வகையில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.



இந்த தீபாவளி திருநாளில் தங்கள் வீடுகளில் மண் விளக்குகளை ஏற்றுவது வழக்கம். இதன் மூலம், எதிர்மறை ஆற்றல் நம் வாழ்விலிருந்து நீங்கும் என்று நம்பப்படுகிறது. இந்து புராணங்களின்படி, தீபாவளி மற்றும் தன திரயோதசி (தந்தேராஸ்) காலங்களில் ஒருவர் தங்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பான வாழ்க்கைக்கு  வேண்டி  பிரார்த்தனை செய்து 13 விளக்குகள் ஏற்றப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. 


தந்தேராஸ் என்றும் அழைக்கப்படும் தன திரயோதசி, தீபாவளி பண்டிகைகளின் ஐந்து நாட்கள் கொண்டாட்டத்தின் முதல் நாளாகும். தீபாவளியன்று மொத்தம் 13 மண் விளக்குகளில் தீபம் ஏற்ற வேண்டும். கெட்ட தீய வினைகள் மற்றும் மரணத்தைத் தடுக்க முதலில் உங்கள் வீட்டிற்கு வெளியே குப்பை அகற்றும் இடத்தில் விளக்கை வைக்க வேண்டும்.


இரண்டாவது மண் விளக்கை நெய் ஊற்றி வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். இது உங்களைச் சுற்றி நேர்மறையான அதிர்வுகளைப் பரப்ப உதவும்.


நம் வாழ்வில் செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக ஆசீர்வாதத்தைப் பெற உங்கள் வீட்டில் லட்சுமி தேவியின் சிலை அல்லது புகைப்படத்தின் முன் மூன்றாவது தியாவை ஏற்றி வைக்க வேண்டும்.


புனித துளசி செடியின் முன் நான்காவது மண் விளக்கை வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் குடும்பத்திற்கு அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.


ஐந்தாவது தீபத்தை உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே வைக்க வேண்டும். இது உங்கள் வீட்டிலிருந்து தீய சக்திகளை விரட்ட உதவுகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,