ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள்... மறக்கக்கூடாத விதிமுறைகள்


 ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள்... மறக்கக்கூடாத விதிமுறைகள்



கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டது. ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராகி கொண்டு வருகிறார்கள். சபரிமலை செல்ல விரத விதிமுறைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும்? என்பதை பார்க்கலாம்


* கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே மாலை அணிவது சிறந்தது.


* தவறும் பட்சத்தில் 19-ம் தேதிக்குள் அணிய வேண்டும். முதல் நாளில் மாலை அணிந்தால் நல்ல நேரம் பார்க்க வேண்டாம். மற்ற தினங்களில் நல்ல நேரம் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.


* குறைந்தபட்சம் 41 நாட்களாவது விரதம் இருக்க வேண்டும்.


* துளசிமணி 108 கொண்டதாக இருக்க வேண்டும். அல்லது உத்திராட்சம் மணி 54 கொண்டதாக இருக்க வேண்டும். அதில் ஐயப்ப திருவுருவப் படம் டாலர் ஒன்றை நினைத்து மாலை அணிய வேண்டும்.


* குருசாமியின் கையால் ஆலயத்துக்குச் சென்று பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி இல்லாதபட்சத்தில், கோயிலுக்கு சென்று கடவுள் பாதத்தில் மாலையை வைத்து பூசாரியிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனே குருவாக நினைத்து மாலையை அணிந்துகொள்ளலாம்.


* இது எதுவுமே முடியாதபட்சத்தில் தமது தாயின் ஆசிர்வாதத்துடன் அவர்களின் கையால் மாலையை வாங்கி அணிந்து கொள்ளலாம்.


* காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை மனதார நினைத்து சரணங்களை கூறவேண்டும்.


* ருத்ராட்சம் அல்லது துளசி மாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக வாங்கி, அதில் ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும். துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.


* விரத காலத்தில் கருப்பு, நீலம், பச்சை நிறமுள்ள ஆடைகளை அணிய வேண்டும். கன்னி சுவாமிகள் கருப்பு மட்டும் தான் அணிய வேண்டும்.


* காலை, மாலை குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு ஐயப்பனிற்கு துளசி, பால், பழம், கற்கண்டு போன்றவற்றில் ஒன்றை நிவேதனம் செய்து 108 சரணம் சொல்லி வழிபட வேண்டும்.


* விரத காலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும், பேசி முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்றே கூற வேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாகும் முன்னர் அதை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.


விரத காலத்தில் பகலில் தூங்கக்கூடாது. இரவில் பாய், தலையணை போன்றவற்றை தவிர்த்து வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும்.


* நீலம் கருப்பு காவி பச்சை நிற வேட்டி சட்டை அணியவேண்டும்


* மிக தண்ணிய பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்


* ரத்த சொந்தங்களில் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்


* ஏதேனும் காரணத்தினால் மாலையை கழற்ற நேரிட்டால் அந்த வருடம் சபரிமலை செல்லக்கூடாது


* புகைப்பிடித்தல் மாமிசம் மது மாது அறவே கூடாது


* பெண் வயதுக்கு வந்த குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது


* காலணி அணிய கூடாது


* தன் கண்ணில் படும் அனைத்து ஆண்களையும் ஐயப்பன் ஆகும் பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதி பழக வேண்டும்


* மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் என்று ஆரம்பித்து முடியும்போது சாமி சரணம் என்று கூறி முடிக்க வேண்டும்


* இருமுடி கட்டும் பொழுது கோவிலிலோ வீட்டிலுள்ள அல்லது குருசாமியின் இடத்தில்தான் இருமுடி கட்ட வேண்டும்


* சபரிமலைக்குச் செல்லும் பொழுது யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக்கூடாது


* பம்பை நதியில் குளிக்கும் போது மூதாதையர்களை நினைத்து ஈமக் கடன்களை செய்து நீராட வேண்டும்


* சபரிமலை பயணம் இனிய முறையில் முடிந்தபின் குருசாமி அல்லது தாயார் மூலமாகவே மாலையை கழட்ட வேண்டும்.


* மாலையைக் கழட்டி ஐயப்பனின் படத்துக்கு முன்பு சந்தனத்தில் வைத்து தீபாரதனை காட்டி விரதத்தை முடிக்க வேண்டும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,