தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்



தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 


இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-


 


“தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பசலனம் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.


 


சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.


 


தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிடம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,