20 ஓவர் போட்டியில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி

கடைசி 20 ஓவர் போட்டியில் வங்காளதேசத்தை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது இந்திய அணி



     வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்தை தோற்கடித்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


இந்திய பவுலர் தீபக் சாஹர் 'ஹாட்ரிக்' சாதனை உள்பட 6 விக்கெட்டுகளை சாய்த்து அமர்க்களப்படுத்தினார்.


,        இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்றிரவு நடந்தது..
'டாஸ்' ஜெயித்த வங்காளதேச கேப்டன் மக்முதுல்லா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது.   பின்னர் 175 ரன்கள் இலக்கை நோக்கி வங்காளதேச அணி ஆடியது.. 19.2 ஓவர்களில் அந்த அணி 144 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீபக் சாஹர் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு பவுலரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். தீபக் சாஹர் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசமும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,