இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்  பேச்சுவார்த்தை

இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்  பேச்சுவார்த்தை


இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு ஆதரவாக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் பேச திரையுலகம் மற்றும் ரசிகா்களுக்கு இயக்குநா் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.


சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ. இங்குதான் பல ஆண்டு காலமாக இளையராஜா இசையமைத்து வருகிறார். அவருக்கென தனி தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் நிர்வாகம்.


 தற்போது வருமானத்தை பெருக்கும் விதமாக, எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்து விட்டு, மாற்று தியேட்டா் கொண்டு வர முடிவு செய்தனா். இதனால் அங்கே இப்போது இளையராஜாவின் இசைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் திரையுலகினா் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினரை சந்தித்து இளையராஜாவின் காலம் வரை அவரை அந்த ஸ்டூடியோவை பயன்படுத்திக் கொள்ள அனுதிக்க கேட்டு பேச இருக்கிறார்கள். இது தொடா்பாக பாரதிராஜா அவர்கள்


''அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழா்களின் நெஞ்சங்களை தொடா்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் இளையராஜாக்வுகும், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தில் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது.


இது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வாகும். ஆகையால் மீண்டும் இசைப்பணிகளை அங்கு தொடா்ந்திட, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் சுமூகமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் விதமாக அனைத்து படைப்பாளிகளும் ,தயாரிப்பாளா்களும், ரசிகா்களும் வரும் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்றுகூடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ''என தெரிவித்துள்ளார்


.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,