நீங்கள் அனைவருமே முதல்-மந்திரிகள் தான் உத்தவ் தாக்கரே


நான் மட்டுமல்ல, நீங்கள் அனைவருமே முதல்-மந்திரிகள் தான் உத்தவ் தாக்கரே


 


நான் மட்டுமல்ல நீங்கள் அனைவருமே இம்மாநிலத்தின் முதல்-மந்திரிகள் தான் என்று எம்எல்ஏக்கள் முன்னிலையில் உத்தவ் தாக்கரே கூறினார்.


,


 


மராட்டிய  மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக  சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விரைவில் பதவி ஏற்க உள்ளார். இன்று மாலை மும்பையில் நடைபெற்ற 3 கட்சிகளின் எம்.எல்.ஏக்கள்  ஆலோசனை கூட்டத்தில் உத்தவ் தாக்கரே ஒருமனதாக முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.


 


இந்த நிலையில் சிவசேனா,தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முன்னிலையில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-


 


ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து தேசத்துக்கு புதிய பாதையை காட்டியுள்ளோம். மாநிலத்தின் முதல்-மந்திரி ஆவேன் என ஒருபோதும் கனவு கண்டது இல்லை. சோனியா காந்திக்கும் மற்றவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிவசேனா தொண்டர்களுக்கு நன்றி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நன்றி. முக்கியமான நேரத்தில் ஒற்றுமை காத்த  அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நன்றி. நான் எதற்கும் அஞ்சவும் இல்லை, பொய்கள் என்பது இந்துத்துவாவின் அங்கம் அல்ல.


 


தேவேந்திர பட்னாவிஸ் எழுப்பிய அத்தனை கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க தயார். பாஜக மக்களை ஏமாற்றிவிட்டது. நான் மட்டுமல்ல நீங்கள் அனைவருமே இம்மாநிலத்தின் முதல்-மந்திரிகள் தான், இன்றைய நிகழ்வு தான் உண்மையான ஜனநாயகம். சத்ரபதி சிவாஜி கனவு கண்ட  மராட்டிய மாநிலத்தை நாம் உருவாக்குவோம். 


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,