தமிழகத்தில் புதிய மாவட்டங்கள்
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள்
புதியதாக உருவாக்கப்பட்ட
வேலூரை பிரித்து வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்களுக்கான அரசாணையையும் மற்றும், நெல்லையை பிரித்து நெல்லை,தென்காசி என 2 மாவட்டங்களுககான பிரிக்கப்பட்டதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது .மற்றும் காஞ்சிபுரத்தை பிரித்து உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்திற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது
,
வேலூர் மாவட்டத்தில் உள்ள தாலுக்காக்கள்
வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், அணைக்கட்டு, காட்பாடி, என ஐந்து தாலுக்காகளும்,வேலூர், குடியாத்தம் 2 வாருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டன.
திருபத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுக்காக்கள்
திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டாறம்பள்ளி, ஆம்பூர், என நான்கு தாலுக்காகளும், திருப்பத்தூர், வாணியம்பாடி 2 வாருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாலுக்காக்கள்
வாலாஜா, நெமிலி, ஆற்காடு, அரக்கோணம் ன நான்கு தாலுக்காகளும் ராணிப்பேட்டை, அரக்கோணம் 2 வாருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் உள்ள தாலுக்காக்கள்
நெல்லை,சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், மானூர், திசையன்விளை, என எட்டு தாலுக்காகளும்,நெல்லை, சேரன்மகாதேவி, ஆகிய 2 வாருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டன.
தென்காசி மாவட்டத்தில்உள்ள தாலுக்காக்கள்?
தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம்,கடையநல்லூர், செங்கோட்டை, வி.கே.புதூர், தென்காசி, என எட்டு தாலுக்காகளும் சங்கரன்கோவில் ஆகிய 2 வாருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டன.
காஞ்சிபுரத்தை பிரித்து உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம் பல்லாவரம், வண்டலூர் என 8 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் குன்றத்தூர், ஆகிய தாலுகாக்கள் செயல்படும்.
Comments