கூகுள் டாப் 10 ல் 4 வது இடம் பெற்ற ஆனந்தகுமார்

கூகுள் டாப் 10 ல் 4 வது இடம் பெற்ற ஆனந்தகுமார்



              


 


 


கூகுளில் அதிகமும் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ள. ஆனந்த் குமார்., ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு ஐ ஐ டியில் இணைந்து பயிலும் விருப்பம் இருப்பின் அவர்களுக்குத் தனது பயிற்சி மையத்தின் மூலமாக இலவசப் பயிற்சி அளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் ஆனந்த் குமார் என்பது வரவேற்கத்தக்க விஷயங்களில் ஒன்று.


   கூகுள் ஒவ்வொரு ஆண்டும், தனது தேடுபொறியில் அதிகமும் தேடப்பட்ட டாப் 10  பிரபலங்கள் என்றொரு பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு இறுதியிலும் 2019 பிரபலங்களை உள்ளடக்கிய அப்படியொரு பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது. கூகுள் வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலில் கூகுளில் அதிகமும் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ளவர் . ஆனந்த் குமார்


                                 சூப்பர் 30 பயிற்சி மையத்தின் நிறுவனரான ஆனந்த் குமார் ஏழ்மையில் வாடும் பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக விளங்கி வரும் ஆனந்த் குமார் கடந்த 18 ஆண்டுகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களது ஐஐடி கனவு நிறைவேற உந்துசக்தியாகவும், வழிகாட்டியாகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும ஆனந்த் குமாரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் அவரது வேடத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து 'சூப்பர் 30' என்றொரு திரைப்படம் வெளிவந்த பின்னர், அவர் இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபலமானார். அவரது கல்விச்சேவையைப் பாராட்டி இந்தியா முழுவதிலுமாகப் பிரபல கல்வி நிறுவனங்கள் அவரைத் தங்களது விருந்தினராக அழைத்துக் கெளரவித்தின. அவ்வகையில் ஆனந்த் குமாரின் புகழ் இந்தியா தாண்டியும் உலகம் முழுவதும் பரவியது.


                    கூகுள் டாப் 10 பட்டியலில் ஆனந்த் குமார் தவிர மேலும் பல பிரபலங்கள் இடம் பெற்றிருந்தாலும மற்ற அனைவருக்கும் திரைப்படப் பின்னணி இருக்கையில் ஆனந்த் குமார் மட்டுமே விதிவிலக்கானவர். அவருக்கு கிடைத்த புகழ் வெளிச்சத்துக்குப் பிறகு தான் அவரது வாழ்க்கை திரைப்படமானது. எனவே, சாமானிய இந்தியர் ஒருவர், தனது திறமையாலும், விடாமுயற்சியாலும் முன்னேறி இன்று கூகுள் தேடலில் டாப் 10 ல் இடம்பெற்றிருப்பது மிகச்சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.


                      இன்னொரு சிறப்பு . கடந்த மாதம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார் ஆனந்த்குமார். இது சாதாரண அழைப்பல்ல. அவ்வகையில் கூகுள் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற இந்தியர்களைக் காட்டிலும் ஆனந்த் குமார் தனி மரியாதைக்குரியவர் என சொல்லலாம் இன்னொரு தகவல் .   எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவரான ஆனந்த் குமாருக்கு கேம்ப்ரிட்ஜில் இணைந்து பயில மிகுந்த விருப்பமிருந்தது.  ஆனால், குடும்பத்தில் நிலவிய பொருளாதாரச் சிக்கல் காரணமாக அவரால் அன்று அங்கெல்லாம் சென்று பயில முடியவில்லை. ஆனால், இப்போது எந்த பல்கலை கழகத்தில் படிக்க விரும்பினாரோ அதே பல்கலைகழகம் இவரின் சாதனை காரணமாக  வேண்டி விரும்பி சிறப்பு விருந்தினராக அழைத்துக் கெளரவித்திருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,