கமல் போஸ்டரில் சாணி

கமல் போஸ்டரில் சாணி


.. தர்பார் மேடையில் படுஆவேசமாக  பேசிய நடிகர் லாரன்ஸ்



    தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் படு ஆவேசமாக அரசியல் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில்7/12/2019 நடைபெற்றது. இதில் இந்தி நடிகர் சுனில்ஷெட்டி, யோகி பாபு, ஏஆர் முருகதாஸ், விவேக், ராகவா லாரன்ஸ், அருண்விஜய், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.


நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸ், மிகவும் ஆவேசமாக அரசியல் பேசினார்.


 ரஜினி பற்றி யார் தவறாக பேசினாலும் நான் பதிலடி கொடுப்பேன் என கோபமாக கூறினார்.


ஒரு அரசியல் கட்சி ஒருங்கிணைப்பாளரை எச்சரித்தார்.


மேலும் பேசிய லாரன்ஸ், சிறு வயதில் தான்  கமல் போஸ்டரில் சாணி அடிப்பேன் என பேசினார் கமலும ரஜனியும்  இப்போது இணைந்திருப்பதை பார்க்கும்போது ஏதோ மாற்றம் ஏற்படப்போகிறது என்று தோன்றுகிறது. பொக்கிஷம் ரஜினிதான் அதிசயம் அற்புதம் . இந்த இரண்டு வார்த்தையால் தமிழ்நாடே அதிர்ந்து விட்டது. பல காலமாக இருக்கும் வார்த்தை. ஆனால், அவர் சொன்னவுடன் அதற்கு மதிப்பு கூடி விட்டது. அதிசயம், பொக்கிஷம் ரஜினிதான். என்றார்


 அவர்  பொதுவாக ரஜனியை புகழ்ந்தாலும் இந்த மேடையில் ஒரு சபை நாகரிகம் வகூட தெரியாமல் கமல் போஸ்டரில் சாணியடித்தேன் என பேசியது பலருடைய முகத்தை சுளிக்க வைத்துள்ளது


ஒருததரை புகழ இன்னொரு உச்ச நடிகரை இகழுனுமா என தெரியல.


மேடை கிடைத்தா என்னவெனுமாலும் பேசுவதா.


ஏதோ இரண்டு படங்களில் வெற்றி பெற்றதால் இப்படி தலக்கனம் வரக்கூடாது என திரைப்பிரபலங்கள் சொல்கிறார்களாம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,