திரைக்கு வரப்போகிற கீர்த்தி பாண்டியன்
கருப்பாக இருந்தாலும் அழகு கீர்த்தி பாண்டியன்
அருண்பாண்டியனின் 3 வது மகளான கீர்த்தி பாண்டியன் 'தும்பா' எனும் படத்தில் அறிமுகமானார். மாடலிங் துறைக்குப் போகலாம்னு சில போட்டோ ஷூட்ஸ் பண்ணி அது சரி வராததால் அப்பாவின் பிசினஸைப் பார்த்துக்க ஆரம்பித்தார். சிங்கப்பூர்ல சினிமா சம்பந்தமான ஒரு கம்பெனியை நடத்திக்கிட்டு இருந்தார். சினிமா படங்களை விநியோகம் பண்ற வேலைகளைப் பார்த்துட்டு இருந்தார். . தற்போது சினிமாதான் முழு மூச்சு என்று இருக்கிறார்.
எங்கேயும் என் அப்பாவோட பெயரைச் சொல்லி வாய்ப்பு வாங்க நினைக்கலை. பல இடங்கள்ல, 'நான் இவரோட பொண்ணுதான்'னு சொல்லாமலேயே ஆடிஷன்ஸ் அட்டென்ட் பண்ணியிருக்கேன். திறமையை வெச்சுத்தான் முன்னேறணும்னு இருக்கேன். சினிமாவுல நடிக்கிறதுக்கு நோ சொன்னதில்லை. இந்த வாய்ப்பு நானே அமைச்சுக்கிட்டதுதான்”.
ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை. நல்ல பெர்ஃபாமன்ஸுக்கு இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து வெளியிடுகிறார்.
Comments