அன்பு செலுத்துவோம் சந்தோசமாக இருப்போம்

அன்பு செலுத்துவோம், சந்தோசமாக இருப்போம்



               தர்பார் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை நேரு அரங்கத்தில் நேற்று 7/12/2019  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ரஜினியின் திரைத்துறைக்கான uஅர்ப்பணிப்பு குறித்து பேசினார்கள்


 நிகழ்ச்சியின் இறுதியாக நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது


       எனது பிறந்தநாளை ரசிகர்கள்க ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். இது இசை வெளியீட்டு விழா அல்ல. எனது பிறந்தநாள் விழாவாக நினைத்துக் கொள்கிறேன்.



             ரஜினிகாந்த் எனும் பெயரை ஒரு நல்ல நடிகனுக்கு வைக்கலாம் என பாலச்சந்தர் யோசித்துக் கொண்டிருந்தார். என்னை பார்த்து நம்பிக்கை வைத்து எனக்கு அந்த பெயரை வைத்தார். பாலச்சந்தர் என்னை நம்பினார். அவர் நம்பிக்கை வீண் போகல. நீங்களும் என்னை நம்புங்கள் உங்கள் நம்பிக்கை வீண் போகாது.


        சினிமாவுக்கு வந்த புதிதில் தயாரிப்பாளர் ஒருவரால் அவமதிக்கப்பட்டேன். அதனால் கோடம்பாக்கம் சாலையில் வெளி நாட்டு காரில் கால் மேல் கால் போட்டு போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.


         பின்னாளில் இத்தாலி கார் ஒன்றை வாங்கினேன். அதனை வெளிநாட்டு ஓட்டுநரை ஓட்ட வைத்து நேராக கோடம்பாக்கம் சென்றேன். தயாரிப்பாளர் ஒருவரால் அவமதிக்கப்பட்ட இடத்தில் எனது காரை நிறுத்தி சிகரெட்டை பற்ற வைத்தேன்.


நாம் வாழ்க்கையில் வெற்றி பெற நேரம் காலம் சந்தர்ப்பம் சூழ்நிலை ஆகியவை ரொம்ப முக்கியம். அரசியல் , ஊடகம் , சமூக வலைதளங்கள் அனைத்திலும் எதிர்மறை வசனங்கள் அதிகமாகி விட்டது.


            அன்பு செலுத்துவோம், சந்தோசமாக இருப்போம், என நடிகர் ரஜினிகாந்த் பேசினார். மேலும் தர்பார் இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழக அரசு, நேரு அரங்கத்தில் அனுமதி அளித்தற்கும் நன்றி தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.


 


 


 


 


.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,