சோகத்தில் நயன்




சோகத்தில் நயன்தாரா !




நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்பது
அனைவரும் அறிந்ததே.
சில வாரங்களாக கோவில் கோவிலாக சுற்றி வருகின்ற நிலையில்


விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகவிருந்த நெற்றிக்கண் என்ற திரைப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் எதுவும் தொடங்காமல்  தற்போதைய நிலையில் இந்தப் படம் டிராப் என்று பேசப்படுகிறது.


விக்னேஷ் சிவன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்த ஒரு படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக இருந்து அந்த  படத்தை போனிகபூர் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது ஆனால் தற்போது இரண்டு நிறுவனமும் தயாரிக்கவில்லை என்பதால் சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ்சிவன் இயக்க இருந்த திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டது.  பொருளாதார நெருக்கடியால்  நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கவில்லை என்றும் இந்த படமும் கிட்டத்தட்ட டிராப் என்றும் கோடம்பாக்க வட்டாரங்கள்  தெரிவிக்கறது.


இதனால், நயன்தாரா  நெற்றிக்கண் படத்திற்காக ஒதுக்கிய தேதிகளை மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்திற்கு மொத்தமாக கொடுத்துவிட்டதால் நெற்றிக்கண் திரைப்படம் மீண்டும் தொடங்கும் என்றும் கேள்விக்குறியே என  கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன. தனது தயாரிப்பில் உருவாக இருந்த முதல் படமே நயனால் கைவிட்டு போனதால்   செம கடுப்பில் உள்ளார் விக்னேஷ் சிவன் எனவும்  இதனால் நயன்தாராவிடம்மிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறார் எனவும் பேசிக்கொள்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,