அதிகபட்சமாக விவாதங்களில் ரவீந்திரநாத் குமார்
அதிகபட்சமாக 42 விவாதங்களில் பங்கேற்றரவீந்திரநாத் குமார்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து இரு அவைகளுக்குமான இணையத்தில் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இரு அவைகளிலும் இருக்கும் தமிழக எம்.பி-க்களின் செயல்பாடுகளுடன் ஒப்பிடுகையில் பா.ம.க-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் கடைசி இடத்தில் இருக்கிறார். அவரது வருகைப் பதிவு வெறும் 15 சதவிகிதம் மட்டுமே.
தமிழகத்தின் 39 மக்களவை உறுப்பினர்களில் 26 பேர் முதல் முறையாக எம்.பி-யாகத் தேர்வானவர்கள். அதனாலோ என்னவோ பெரும்பாலான எம்.பி-க்கள் கூட்டங்களில் பங்கேற்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். 39 எம்.பி-க்களில் மூன்று பேர் 100 சதவிகிதம் வருகைப் பதிவு வைத்துள்ள நிலையில், 9 பேர் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான வருகைப் பதிவை வைத்திருப்பதை இணைய தகவல் தெரிவிக்கிறது.
அ.தி.மு.க சார்பாக மக்களவைக்குத் தேர்வான ஒரே எம்.பி-யான ரவீந்திரநாத் குமார் இதுவரை நடைபெற்ற 42 விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். தமிழக எம்.பி-க்களில் அவரே அதிக எண்ணிக்கையிலான விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். அ.தி.மு.க-வின் ஒரே எம்.பி என்பதால் அவருக்கு அனைத்து விவாதங்களிலும் பேசும் வாய்ப்பு கிடைப்பதுவும் அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவரது வருகைப் பதிவு 79 சதவிகிதமாக உள்ளது.
Comments