அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவார்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சர்வ நிச்சயம்.
பொள்ளாச்சியில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் நிருபர்களிடம் கூறியதாவது-
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சர்வ நிச்சயம். கட்சியை தொடங்க அடிப்படை கட்டமைப்புகள் தேவை. அதற்கான பணிகளை கடந்த 2 ஆண்டுகளில் அவர் செய்துவிட்டார்.
வேறு எந்த கட்சிக்கும் 234 தொகுதிகளிலும் தங்கள் பிரதிநிதிகளை அமர்த்த முடியாத நிலை உள்ளது. ஆனால் ரஜினிகாந்த் 234 தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடிகளில் பிரதிநிதிகளை அமர்த்தும் பணியை செய்துள்ளார்.
இதுபற்றி தெரிந்ததால் தான் அவர் அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவார் என்பதை உறுதியாக கூறுகிறேன்.
இவர் இதனையே பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார் ,ஆனால் தலைவர் எப்போ வாய் தொறப்பாருனுதான் ரசிகர்கள் புலம்புகிறார்கள்
Comments