பிரதமர் மோடி வீரர்களுக்கு மலர் வளையம்
நாட்டின் 71வது குடியரசு தினத்தினை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னம் அமைந்துள்ள பகுதிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு, பணியின்பொழுது உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Comments