5 ஆயிரம் மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தகம் வாசிப்பு


சென்னை புத்தக கண்காட்சி வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.

                  தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின்(பபாசி) சார்பில் 43-வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 9-ந்தேதி தொடங்குகிறது. 21-ந்தேதி வரை 13 நாட்கள் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.











வேலைநாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி நடைபெறும்.

                    இந்த புத்தக கண்காட்சியின் முன்னோட்டமாக ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சியை ‘பபாசி’ சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடத்தியது. பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 5 ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் புத்தகங்களை வாசித்தனர்.அதாவது பபாசி வழங்கிய புத்தகங்களை சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் தமிழில் வாசித்தனர்.
           . சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் விஜயராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

     நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பங்களிப்பு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

.











Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,