6 மணி நேரம் வரிசையில் அரவிந்த் கெஜ்ரிவால் காத்திருந்து வேட்புமனு தாக்கல்


70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் ஊர்வலமாக சென்றபோது, ஊர்வலத்தில் திரண்ட கூட்டத்தினால் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாததால், அவரால் மனுதாக்கல் செய்ய முடியவில்லை.

மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்வதற்காக டெல்லி ஜம்நகர் அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அப்போது மனு தாக்கல் செய்தவற்காக ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர்.

இதனால் பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்தவற்காக வரிசையில் நின்றவர்களுக்கு அதிகாரிகள் டோக்கன் வழங்கினார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 45 எண் டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் அவர் 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்து அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக காத்திருக்கிறேன். எனது டோக்கன் எண் 45. ஏராளமானவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நிற்கிறார்கள். ஜனநாயகத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,