புத்தக கண்காட்சிக்கு  ரூ75 லட்சம் நிதி

புத்தக கண்காட்சிக்கு அடுத்த ஆண்டு முதல் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

 



 

                            சென்னை நந்தனத்தில் 43-வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

                இந்தநிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன் , ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன், கேபி அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.








 

                         புத்தக கண்காட்சி திறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியபோது அடுத்த ஆண்டு முதல் புத்தக கண்காட்சிக்கு  ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

இன்று தொடங்கி வருகிற 21ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியானது, வார நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெற உள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,