ஏசி பேருந்து சென்னையில்

                    ஒரு  இடைவெளிக்குப் பின்னர் மாநகர போக்குவரத்துக் கழகம் மீண்டும் ஏ.சி பேருந்துகளை இயக்கி உள்ளது. கோயம்பேடு - வேளச்சேரி (தடம் எண்:570) மற்றும் திருவான்மியூர் - தாம்பரம் (தடம் எண்:91) ஆகிய  தடங்களில் தற்போது ஏசி பேருந்து இயக்கப்படுகிறது.

 

சமீபத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தலா ₹36 லட்சம் மதிப்பு கொண்ட 48 பேருந்துகளை வாங்கியுள்ளது. விரைவில், மேலும் 5 வழித்தடங்களில் ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சென்ட்ரல் - திருவான்மியூர், தி.நகர் - கேளம்பாக்கம், கோயம்பேடு - வண்டலூர், கிழக்கு தாம்பரம் - திருவான்மியூர், பிராட்வே - கேளம்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் இந்த ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

 

குறைந்தபட்ச கட்டணமாக ஏசி பேருந்தில் ரூ.15 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.60 கட்டணமாக உள்ளது. 2018-ல் இயக்கப்பட்ட வால்வோ ஏசி பேருந்தில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.28 இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,