பாதங்களை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி



             கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். துறைமுக விழாவில் நேற்று பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளை மம்தா பானர்ஜி புறக்கணித்ததாக கூறப்படுகிறது.இன்றைய கொல்கத்தா துறைமுக விழாவில் 105 வயது ஓய்வூதியதாரரான நகினா பகத், 100 வயதான நரேஷ் சந்திரா சக்கரவர்த்தி ஆகியோரை பிரதமர் மோடி சிறப்பித்தார். அப்போது 105 வயது நகினா பகத், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்க முயல. அவரை தடுத்த பிரதமர் மோடி, நகினா பகத்தின் பாதங்களை  தொட்டு வணங்கினார். பிரதமர் மோடியின்  இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.



 



 












Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,