ஜமாஅத் சார்பில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு

திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஜமாஅத் சார்பில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் அனைத்து கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் முஹல்லா அனைத்து ஜமாஅத் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஜமாஅத் ஒருங்கிணைப்பு தலைவர் பாக்கர் அலி தலைமையில் நடைபெற்றது.


 இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பங்கேற்றார். இதேபோல் திமுக ,காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.



 


PHOTOS AND VIDEO by


BALA.Thiruthooraipoondi


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,