ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் மழையால் காட்டுத்தீயின் தாக்கம் குறைவு

ஆஸ்திரேலிய நாட்டில் அதன் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது.


 


 


இந்த நிலையில் காட்டுத்தீ பரவிய பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென மழை பெய்தது. அந்த மழை நேற்றும் தொடர்ந்தது. இதனால் காட்டுத்தீயின் தாக்கம் குறைந்துள்ளது.


சூறாவளி காற்று, வெப்ப காற்றின் தரத்தை மாற்றி உள்ளது என விக்டோரியா சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை கூறியது. இந்த வார இறுதியில் மேலும் மழையை எதிர்பார்ப்பதாக அந்த முகமை தெரிவித்தது.


நியூசவுத் வேல்ஸ் தீயணைப்பு படை இந்த திடீர் மழை பற்றி கருத்து கூறுகையில், ‘‘இது எங்கள் கிறிஸ்துமஸ், பிறந்த நாள், திருமண விழா கொண்டாட்டங்களுக்கு வழி வகுத்துள்ளது’’ என தெரிவித்தது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,