கிரகணப்பிரவேசம்
கிரகணப்பிரவேசம் ...!!!
சந்திரணகிரகணத்தைப்பற்றிய தன் மனதின் எண்ணங்களை
கவிதையாக தந்துள்ளார், கவிஞர் மஞ்சுளா யுகேஷ்.
வையத்து நிழல் உந்தன்
மையத்தை மறைக்குமென்றால்...
அதன் உள்ளடக்கத்தில்
நானும்உண்டே ...
விசித்திர ஸ்பரிசமிது...!!
அடிக்கடி மேகம் உந்தன்
தேகம் மூடினாலும்
சோகம்கொண்டிடாத நீ...
ஆபூர்வமாய் நேருமிந்த
நேர்கோட்டு நிகழ்வதனின்
நிழல் வருடலுக்கெல்லாம்
வருத்தம்கொண்டிடுவாயோ...
வட்ட நிலாவே...!!!
-----மஞ்சுளா யுகேஷ்
Comments