காஷ்மீரில் மீண்டும் குறுஞ்செய்தி சேவை

                           கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதற்கு எதிராக தாக்கலான மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இணையதள சேவைகளை மீண்டும் வழங்குவது பற்றி ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்குமாறு யூனியன் பிரதேச நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. 




அதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி, 6 மாவட்டங்களில் உள்ள ஒட்டல்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு இணையதள சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டது.

 

370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டபோது தடை செய்யப்பட்ட குறுஞ்செய்தி சேவை மீண்டும் தொடங்கியது என்று காஷ்மீர் முதன்மை செயலர் ரோகித் கன்சால் தெரிவித்து உள்ளார்.

 

தற்போது 5 மாத கால முடக்கத்திற்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் அனைத்து பிரி-பெய்டு செல்போன் இணைப்புகளுக்கும் குரல் மற்றும் குறுஞ்செய்தி வசதிகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று ஜம்முவின் 10 மாவட்டங்களிலும், காஷ்மீரின் குப்வாரா, பந்திப்போரா மாவட்டங்களிலும் 2 ஜி இணையதள  சேவை சீரமைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,