புத்தாண்டை வரவேற்ற மழை
சென்னையில் இன்று 1.1.2020 காலை பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. எழும்பூர், புரசைவாக்கம், செண்ட்ரல், கோடம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், பல்லாவரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது
மழை நீர் தாழ்வான இடங்களில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இன்னும் 4 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
Comments