ஒளி மயமான எதிர்காலத்திற்கு உதயமான பொங்கல்

          இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக  (18.01.2020) காலை 10.30 மணிமுதல் பொங்கல் விழா திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள புதுநகரில் எஸ்.எஸ்.மாலைநேர திறன்வளர் மையத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.


இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் திரு. S.ஹரிஷ் குமார் அவர்களின் தலைமையில் நடந்த இந்த பொங்கல் விழாவில் நிவேதா முன்னிலையில் மேகலா வரவேற்புரையை வழங்கினார்.


இந்த பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள், முன்னால் வார்டு உறுப்பினர் திரு.M.குமார், காமாட்சி குமார் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


இந்த பொங்கல் விழாவில் 75க்கு மேற்பட்ட குழந்தைகளும் 30 க்கு மேற்ப்பட்ட பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர். குழந்தைகளுக்கு இசை நாற்காலி, நாடகம், நடனம், பாட்டலில் தண்ணீர் நிரப்புதல்,ஓட்டபந்தயம், கோலப்போட்டி, பலுன் உடைத்தல்,பிஸ்கட் சாப்பிடுதல், மற்றும் லெமன் ஸ்பூன் என பலவிதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் பெற்றோர்களும் ஆர்வமாக கலந்துக்கொண்டு பரிசுகளை வென்றனர்.
.
     மேலும் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் ஆசிரியர்கள் புஷ்பா, மற்றும் லயோலா கல்லூரி மாணவர் தாமஸ், சகோதரர் சுஜித், தன்னார்வலர்கள் நவீன், திவ்யா ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பாக நடத்த உதவி செய்தனர்கள். செய்தி மற்றும் புகைப்படங்கள் அல்லாபக்ஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,