பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை,
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி 17 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
, குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசுத்தரப்பில் 36 சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகள்ம், விசாரிக்கப்பட்டனர். 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று3/./2020 குற்றவாளிகளுக்கு தீர்ப்புவழங்கப்பட்டது.
போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர். என்.மஞ்சுளா தீர்ப்பு வழங்கினார்
தீர்ப்பு விவரம் வருமாறு:-
* ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் விவரம்...
A1) ரவிகுமார்( 56) சாகும் வரை ஆயுள்
2) சுரேஷ் (32) சாகும் வரை ஆயுள்
3) ராஜசேகர்(48) ஆயுள்
4) எரால்பிராஸ்(58) 7 ஆண்டு
5) அபிஷேக் ( 28) சாகும் வரை ஆயுள்
6) சுகுமாரன் (60) 5 ஆண்டு
7) முருகேசன்(54) 5 ஆண்டு
8) பரமசிவம் (60) 5 ஆண்டு
9) ஜெய்கணேஷ் (23) 5 ஆண்டு
10) பாபு(36) இறந்துவிட்டார்
11) பழனி(40) சாகும் வரை ஆயுள்
12) தீனதயாளன்(50) 5 ஆண்டு
13) ராஜா (32) 5 ஆண்டு
14) சூர்யா(23) 5 ஆண்டு
15) குணசேகரன்(55) விடுதலை
16) ஜெயராமன்(26) 5 ஆண்டு
17) உமாபதி(42) 5 ஆண்டு
* ராஜசேகர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. எரால் பிராஸ் என்பவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மற்ற குற்றவாளிகள் சுகுமாறன்,சூர்யா, ஜெயராமன், உமாபதி, முருகேசன் , பரமசிவம், ஜெயகணேஷ், தீனதயாளன், ராஜா ஆகிய 9
Comments