நீண்ட பட்ஜெட் வெற்று அறிக்கை
பட்ஜெட் வெற்று அறிக்கையாக உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
2020-2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: - வேலைவாய்ப்பின்மைதான் முக்கிய பிரச்சினையாகும். 
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கான எந்த முக்கிய யோசனையும் பட்ஜெட்டில் இல்லை. மிக நீண்ட பட்ஜெட் உரையாக இது இருந்திருக்கலாம். ஆனால், பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை வெற்று அறிக்கையாகவே உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments