சட்டமன்ற தேர்தல் தான் கிளைமேக்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக கோரிக்கை வைத்து உள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டால் இளைஞர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது.முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி இன்டர்வல் தான் என்றும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தான் கிளைமேக்ஸ் உள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
Comments