ஒய்வு பெற்ற அலுவலக உதவியாளர், கிராம உதவியாளர்களுக்கு பாராட்டு விழா

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஒய்வு பெற்ற அலுவலக உதவியாளர், கிராம உதவியாளர்களுக்கு பாராட்டு விழா தாலுக்கா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.


                     வட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார், துணைத் தலைவர் முரளி, செயற்குழு உறுப்பினர் செல்லப்பா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துவேல் முன்னிலை வகித்தனர், வட்ட செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், தாசில்தார் ராஜன்பாபு ஆகியோர் பணிஒய்வு பெற்ற அலுவலக உதவியாளர் சுப்பிரமணியன், கிராம உதவியாளர் உலகநாதன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி பேசினர்.‘


                             மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட செயலாளர் பாண்டியன், முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் தருமையன், மருந்தாளுநர் சங்க மாவட்டதலைவர் மணிவண்ணன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், பணிஒய்வு பெற்ற அலுவலக உதவியாளர் சுப்பிரமணியன், கிராம உதவியாளர் உலகநாதன் ஏற்புரை வழங்கினர். வட்ட பொருளாளர் குமார் நன்றி கூறினார்


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,