திருத்துறைப்பூண்டி நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தலைமையாசிரியர் தங்கராசு தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பழனி, துணைத் தலைவர் சதீஸ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சோமநாதன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் தனபாலன்
வரவேற்றார். விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டி வழங்கி பேசினார். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியர் யோகராசன்நன்றி கூறினார். விழாவில் 111 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments