தஞ்சை பெரியகோயில் கும்பாபிஷேகத்திற்கு லீவு விட கோரிக்கை
01.2.20
உலகிலேயே மிகப்பெரிய கோவிலான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் சங்க செயலாளர் செந்தில் தெரிவித்ததாவது... யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மிகப் பெரிய கோவிலும் பழமையான கோயிலும் ஆன தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டிய ராஜராஜ சோழன் ஆசிய கண்டம் முழுவதும் வெற்றி வாகை சூடி மன்னன் ஆவார் .அவரது புகழ் ஓங்கும் வகையில் தமிழகம் முழுவதும் இருந்து தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை காண அன்று அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments