16 வார்த்தைகளில் ராமாயணம். மகளிர் தின கட்டுரை

16 வார்த்தைகளில் ராமாயணம்..!


பிறந்தார், வளர்ந்தார், கற்றார், பெற்றார், மணந்தார், சிறந்தார், துறந்தார், நெகிழ்ந்தார், இழந்தார், அலைந்தார், அழித்தார்,செழித்தார், துறந்தார், துவண்டார், ஆண்டார், மீண்டார்


விளக்கம்


1. பிறந்தார்:


ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.


2.வளர்ந்தார்:


தசரதர், கௌசல்யை,  சுமித்திரை, கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது


3.கற்றார்:


வஷிஷ்டரிடம் சகல வேதங்கள், ஞானங்கள்,  கலைகள் முறைகள் யாவும் கற்றது.


4.பெற்றார்:


வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு, விஸ்வாமித்ரர் யாகம் காத்து, விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.


5.மணந்தார்:


ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.


6.சிறந்தார்:


அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும்,  தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.


7.துறந்தார்:


கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.


8. நெகிழ்ந்தார்:


அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.


குகனார் அன்பில் நெகிழ்ந்தது.


பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.


பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும், தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும்,  தன்னலமற்ற குணத்தையும்,  தியாகத்தையும்,  விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.


அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.


சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.


விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.


எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.


9.இழந்தார்:


மாய மானின் பின் சென்று, அன்னை சீதையை தொலைத்தது.


10.அலைந்தார்


அன்னை சீதையை தேடி அலைந்தது.


11.அழித்தார்


இலங்கையை அழித்தது.


12.செழித்தார்


சீதையை மீண்டும் பெற்று, அகமும் முகமும் செழித்தது.*


ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று,  செல்வச் செழிப்பான வாழ்க்கைக்குத் திரும்பியது.


13.துறந்தார்


அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில்,  மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக,  அன்னை சீதையைத் துறந்தது.


14.துவண்டார்


அன்னை சீதையை பிரிய நேர்ந்தது,  ஶ்ரீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.


15.ஆண்டார்


என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும்,  மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவறச் செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும்,  செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.


16. மீண்டார்


பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது.


தகவல் நிர்மலாராஜவேல்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,