மகளிர் தினம் கவிதை பெண் சிசு வதை

பெண் சிசு வதை


கவிதை


கருப்பை எனும் தோட்டம்


    பெண்பூ சுமந்து விட்டால்


கண் போன்று காக்காமல்


     கருவறையில் சிதைப்பீரோ?


 


அரும்பு ஒன்று மலருமுன்னே


     அதை நசுக்கி எறிந்துவிட்டு


          பூவில்லா ஒரு தோட்டம்


      மணம் பரப்பும் என்பீரோ?


 


பெண்ணாலே வந்தோம் என்று


       உண்மையை மறந்துவிட்டு


             பூவில்லா கனியுண்டு


என்று தினமும் உரைப்பீரோ?


நன்றி --ரத்னமாலா புருஸ்


          (ரத்னமாலா கவிதைகள் தொகுப்பிலிருந்து)


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,