ஆறு அறிவு என்பது என்ன
உலகில் வாழும் உயிரினங்களில் ஆறறிவு படைத்த உயிரினம் மனித வர்க்கம் ஒன்றுதான்.
சரி, அந்த ஆறு அறிவு என்பது என்ன? தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் என்ன கூறுகிறது?
- ஓரறிவு - தொடுதலால் உணர்வது.
- இரண்டறிவு - தொடுதல் மற்றும் சுவைத்தலால் அறிவது.
- மூன்றறிவு – தொடுதல், சுவைத்தல் மற்றும் முகர்தலால் அறிவது.
- நான்கறிவு - தொடுதல், சுவைத்தல், முகர்தல் மற்றும் பார்த்தலால் அறிவது.
- ஐந்தறிவு – தொடுதல், சுவைத்தல், முகர்தல், பார்த்தல் மற்றும் கேட்டலால் அறிவது.
- ஆறறிவு – தொடுதல், சுவைத்தல், முகர்தல், பார்த்தல், கேட்டல் மனத்தால் சிந்தித்து அறிவதாகும்.
தகவல்: செ. ஏ .துரைபாண்டியன்
Comments