திட்டக்குடி  சட்டமன்ற உறுப்பினர் திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ கணேசன் டாடா ஏசி வாகனம் மூலம் கொரோனா கிருமி நாசினி மருந்து தெளிப்பு

திட்டக்குடி  சட்டமன்ற உறுப்பினர் திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்
சி.வெ கணேசன் டாடா ஏசி வாகனம் மூலம் கொரோனா கிருமி நாசினி மருந்து தெளிப்பு



கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா கல்லூர் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க கல்லூர், மற்றும் பொடையூர் ஊராட்சியில் உள்ள கடைவீதி, பேருந்து நிலையம், மருத்துவமனை, தெரு பகுதிகள் வடக்கு ஒன்றிய கவுன்சிலர் கே.என்.டி. சுகுணா சங்கர் தலைமையில் 
சிறப்பு அழைப்பாளராக திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டு டாடா ஏசி வாகனம் உதவியுடன் ஸ்பிரேயர்  மூலம் கொரோனா கிருமி நாசினி மருந்து தெளித்தார்.


பின்னர் கொரோனா  நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.


இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வெள்ளையம்மாள் ஜானகிராமன் ,கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


 


செய்தியாளர். காமராஜ். விருத்தாசலம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,