திருத்துறைப்பூண்டியில்பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சாலையோர கடைகளை மூடல்

நாடு  முழுவதும் கரோனாவைரஸ் தாக்குதல் காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது


இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் கரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்து பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சாலையோர கடைகளை மூட நகராட்சி ஆணையர் (பொ) சந்திரசேகரனுக்கு உத்தரவிட்டார்.


திருத்துறைப்பூண்டியில் 144 - தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் சென்ற  10 பேர் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல், டாஸ்மாக் மதுபானம் திருட்டு தனமாக விற்பனை செய்த 4 பேர் கைது.
தமிழகம் முழுவதும் கரோனாவைரஸ் பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்ட நிலையில் பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருவதை தடுக்க நகர எல்லைகளில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இந்த நிலையில் இருசக்கர வாகனங்களில் சென்ற 10 பேர் மீது வழக்குபதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் மேட்டுப்பாளையம், நெடும்பலம் பகுதிகளில் டாஸ்மாக் மதுபானங்கள் விற்ற 4 பேரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்தனர்



. செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,