திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ் பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனம் மூலம் கிரிமிநாசினி தெளிக்கும் பணி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ்
பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனம் மூலம் கிரிமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ்
பரவாமல் தடுக்க மாவட்ட கட்டுப்பாட்டு பொறுப்பு அலுலர் சிவகுமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனம் மூலம் பழைய பேருந்துநிலையம், நகர பகுதிகள், புதிய பேருந்துநிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சாலைகளில் கிரிமிநாசினி தெளிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றானர். மேலும் நகராட்சி ஆணையர் (பொ) சந்திரசேகரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடசலம் மற்றும் அலுவலர்கள் கரோனாவைரஸ் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments